
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஒரு பெண் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த பெண்ணின் கை மணிக்கட்டு துண்டானது. இந்த நிலையில் டாக்டர்கள் சுமார் 8 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து அந்த பெண்ணின் கையை வெற்றிகரமாக இணைத்துள்ளனர்.
தற்போது அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எட்டு மணி நேரம் போராடி வெற்றிகரமாக சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு அந்த பெண்ணின் உறவினர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.