
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, அமித்ஷா மக்கள் பிரச்சனை திசை திருப்புவதற்காக தான் அம்பேத்கர் குறித்து பேசி உள்ளார். உயிருடன் இருப்பவர்களுக்கு சாப்பாடு போடாத கடவுள் இறந்த பின் சொர்க்கம் தருவார் என்றால் அதை எப்படி நம்புவது. அயோத்தியில் கடவுள் பெயரை சொல்லித்தான் போட்டி போட்டீர்கள். ஆனால் அம்பேத்கர் பெயரை கூறியவர் தான் அங்கு வெற்றி பெற்றுள்ளார்.
மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது அவர்களுக்கு உதவுவது என்பது சடங்கு என விஜய் கூறுவது தவறு. அது ஒரு கடமை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்திப்பது தலைவர்களின் கடமை. மக்களை நேரில் சென்று சந்திப்பது சடங்கு என கூறும் விஜய் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்தித்தது ஏன்? தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சென்று சந்தித்தது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.