இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் ஆன்லைன் மூலமாக பல்வேறு நபர்களும் தங்கள் பொருட்களை விற்பனை செய்கிறார்கள். ஆன்லைனில் புதுவிதமான பிசினஸ் செய்கிறார்கள். அந்த வகையில் ஒரு சிறுவன் ஆன்லைனில் ஸ்டிக்கர் விற்பனை‌ செய்வதன் மூலம் பல லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார். அதாவது இங்கிலாந்து நாட்டில் கேலன் மெக்டொனால்ட் என்ற 17 வயது சிறுவன் வசித்து வருகிறார். இவர் ஸ்டிக்கர் தயாரிப்பதில் மிகுந்த ஆர்வமாக இருக்கிறார். இதன் காரணமாக கடந்த இரு வருடங்களுக்கு முன்பாக சிறுவனுக்கு அவருடைய தாயார் பரிசாக ஒரு கைவினை இயந்திரத்தை பரிசாக வழங்கியுள்ளார். அதை வைத்து கண்ணாடி பொருட்களில் ஒட்டுவதற்கான ஸ்டிக்கரை உருவாக்கி அதனை பேஸ்புக் மூலம் விற்பனை செய்துள்ளார்.

இந்த வருடத்தின் ‌ தொடக்கத்தில் அவர் மாதம் 200 ஸ்டிக்கர்கள் வரை விற்பனை செய்துள்ளார். இதன் மூலம் ஒரு மாதத்திற்கு சராசரியாக 16 லட்ச ரூபாய் சம்பாதிக்கிறார். இவர் கல்லூரிக்கு சென்ற பிறகு தினமும் 3 மணி நேரம் ஸ்டிக்கர்கள் தயாரிப்பதற்கு நேரத்தை செலவிடுகிறார். இவர் பல்வேறு சமூக வலைதளத்தின் மூலம் இதுவரை 83 லட்சம் ஸ்டிக்கர்களை விற்பனை செய்துள்ளார். மேலும் இது தொடர்பாக சிறுவன் கூறுகையில் என்னுடைய தாயார் கொடுத்த அந்த கிறிஸ்மஸ் பரிசு தான் எனக்கு வாழ்க்கையே மாற்றி போட்டது. முதலில் விளையாட்டாக அதனை நான் தொடங்கிய நிலையில் பின்னர் அதன் மூலம் என் வாழ்க்கையே மாறிவிட்டது என்று கூறியுள்ளார்.