சிரியா மத்திய கிழக்கு பகுதியில் அமைந்துள்ள நாடாகும். லெபனான் மற்றும் இஸ்ரேலை தனது எல்லையாக சிரியா கொண்டது. இங்கு கடந்த 50 ஆண்டு காலமாக அதிபர் பஷர் அல் ஆசாத் குடும்பத்தினரே ஆட்சி புரிந்து வருகின்றனர். இந்த ஆட்சியில் பெருமளவு பொருளாதார சரிவு, வேலையின்மை திண்டாட்டம், சர்வாதிகார ஆட்சி ஆகியவற்றால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் கடந்த 2011 ஆம் ஆண்டில் இருந்து உள்நாட்டு போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த சமயத்தில் 14 வயது பள்ளி சிறுவனின் ஓவியம் சிரியாவில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது.

இந்த சிறுவனின் கிராஃப்டி ஓவியத்தால் முதன் முதலில் மக்கள் அடக்கி வைத்திருந்த எழுச்சி போர் வடிவம் அடைந்தது.மௌவியா சியாஸ்னே, என்று சிறுவன் கிராஃப்டிக் ஓவியம் ஒன்றை வரைந்து அதில் “இது உங்களின் முறை”என எழுதியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனால் அவனும், அவனது நண்பர்களும் துன்புறுத்தப்பட்டனர். இச்செய்தி சிரியா முழுவதும் பரவி மிகப்பெரிய போரை ஏற்படுத்தியது. ஆனால் அப்போது ரஷ்யாவின் உதவியுடன் ஆஷாத் தனது ஆட்சியை தக்க வைத்து கொண்டார். ஆனால் கடந்த வாரம் நடைபெற்ற கிளர்ச்சியான உள்நாட்டு போரால் ஆஷா தின் ஆட்சி கவிழ்ந்தது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெருமளவு பேசப்படுகிறது.