சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சூரச்பூர் மாவட்டத்தில் சீமா பாண்டோ என்ற பெண் வசித்து வந்தார். இவர் தனது காதலன் சந்திரிகா பிரசாத்துடன் வசித்து வந்தார். அந்த பெண்ணின் தந்தை தனது மகளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சந்திரிகா பிரசாத்தை பிடித்து விசாரித்தனர். அப்போது திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. கடந்த 10 மாதங்களுக்கு முன்பு சந்திரிகா பிரசாத்துக்கு தனது காதலி மீது சந்தேகம் வந்தது.

அவர் தகாத உறவு வைத்திருப்பதாக நினைத்தார். இதனால் சீமா பாண்டோவை கொலை செய்து உடலை புதைத்து விட்டதாக கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த நபர் கூறிய இடத்திற்கு சென்று புதைக்கப்பட்ட பெண்ணின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவரது தந்தை சோர் லால் பாண்டோவும் ஏழு மாதங்களாக காணவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.