
கர்நாடகா மாநிலம் மங்களூரு பகுதியை சேர்ந்தவர் ஹீனா பாத்திமா. இவரது கணவர் முகமது தில்ஃபாஸ். இந்த தம்பதிக்கு 2019 ஆம் வருடம் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் ஹீனா பாத்திமா மகளிர் காவல் நிலையத்தில் தனது கணவர் மீது புகார் ஒன்று அளித்துள்ளார்.
அந்த புகாரில் தனது கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததால் அது குறித்து தான் கேட்டதாகவும் இதில் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த வாக்குவாதத்தில் தனது கணவர் மூன்று முறை தலாக் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் திருமணத்தின்போது 22 பவுன் தங்க நகை வரதட்சணையாக வாங்கிய தனது கணவர் மற்றும் குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.