பிரபல நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் இவனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அந்த திருமணத்தை ஆவணப்படுத்தி அதன் ஒளிபரப்பு உரிமையை netflix பெற்றிருந்ததால் அதிகாரப்பூர்வமாக திருமண வீடியோக்கள் எதுவும் வெளியாகவில்லை. பியாண்டு தி பெரி டேல் என்ற பெயரில் உருவாகும் அந்த வீடியோவின் டிரைலர் சமீபத்தில் ரிலீஸ் ஆனது. நவம்பர் 18-ஆம் தேதி திருமண வீடியோ நிகழ்வு ரிலீஸ் ஆகும் என netflix அறிவித்தது.

இந்த நிலையில் நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது, நெட்பிளிக்சில் வெளியாகவுள்ள ஆவணப்படத்தில் என் வாழ்க்கையில் முக்கிய படமான நானும் ரவுடிதானே சேர்க்க முடியாமல் போனது மற்றும் அந்த படத்தின் புகைப்படங்கள், பாடல்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்த ஒப்புதல் கேட்டு இரண்டு வருடங்களாக உங்கள் பின் அலைந்தோம். ஆனாலும் இறுதிவரை அது நடக்கவில்லை. அந்த படத்தின் பாடல் வரிகளை பயன்படுத்தக் கூடாது என நீங்கள் மறுத்தது என் மனதை நொறுக்கியது என நயன்தாரா தனுஷின் செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நயன்தாரா திருமண ஆவணப்படம் ட்ரைலர் ரிலீஸ் ஆனது. அதில் உபயோகப்படுத்தப்பட்ட 3 வினாடி வீடியோவிற்கு எதிராக லீகல் நோட்டீஸ் அனுப்பி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட, ஏற்கனவே இணையதளங்களில் பகிரப்பட்ட ஒரு காட்சிக்கு 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்கப்பட்டிருப்பது வினோதமாக உள்ளது. கீழ்த்தரமான இந்த செயல் ஒரு மனிதராக நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. மேடைகளில் உங்கள் அப்பாவி ரசிகர்கள் முன் பேசுவதைப் போல ஒரு சதவீதம் கூட உங்களால் நடந்து கொள்ள முடியாது என்பதை நானும் என் கணவரும் நன்றாக அறிந்திருக்கிறோம் என நயன்தாரா தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.