பள்ளிகள் செயல்படும் இடங்களுக்கு அருகே ஏராளமான கடைகள் உள்ளது. மாணவர்கள் இடைவேளை நேரங்களிலும், பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பும் போதும் தின்பண்டங்களை வாங்கி சாப்பிடுகின்றனர். சாலையோர கடைகளிலும் மாணவ மாணவிகள் தின்பண்டம் வங்கி சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளிகளுக்கு அருகே உள்ள சாலையோர கடைகளில் போதை பொருட்கள் கலந்த திண்பண்டங்கள் விற்பனை செய்யப்படுவதாக மாநில மனித உரிமைகள் ஆணைய காவல் ஆய்வாளர் காஞ்சனா கூறியுள்ளார். இந்த தகவல் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோருடைய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.