
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருச்சிற்றம்பலம் அருகில் ஒட்டங்காடு தெற்கு பெரியகாடு கிராமத்தில் வசிப்பவர் ரங்கசாமி. இவருக்கு விஜயலதா என்ற மனைவி இருந்துள்ளார். ரெங்கசாமி -விஜயலதா தம்பதியினருக்கு ஒரு மகன்,ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் ரங்கசாமியின் மகள் அதே பகுதியை சேர்ந்த அவரது சொந்தக்கார இளைஞரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. பெற்றோர்கள் தடுத்தும் சம்பவ நாளுன்று ரங்கசாமியின் மகள் அந்த இளைஞருடன் ஓடி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனது மகளை கூட்டி வர தாய் விஜயலதா அந்த இளைஞனின் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் அந்த இளைஞனின் வீட்டில் யாரும் இல்லை வீடு பூட்டி இருந்தது.
இதனால் மன வேதனையில் வீட்டின் முன்பு விஷம் அருந்தி மயங்கி கீழே விழுந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த ரங்கசாமி மற்றும் அவரது மகன் விரைந்து சென்று விஜயலதாவை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். விஜயலதாவுக்கு தொடர்ந்து மேல் சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது. எனவே, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக விஜயலதா இறந்துள்ளார். இது குறித்து அறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற மகள் ஓடிப் போனதால் மனம் உடைந்த தாய் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.