விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி வி சாலையில் நடந்து முடிந்தது. மாநாட்டுக்கு வந்த தொண்டர்கள் விஜய் என்னவெல்லாம் பேசப்போகிறார் என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தனர். அப்போது விஜய் தனது எழுச்சிமிக்க பேச்சால் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். தனது அரசியல் கொள்கைகள் கோட்பாடுகள், மக்கள் நலன் என அனைத்தைப் பற்றியும் விளக்கமாக பேசினார். பெண்களுக்கான பாதுகாப்பு, இளைஞர்கள் எதிர்காலம் கொடி விளக்கம், அரசியல் தலைவர் முன்னோடிகள் என மக்களை உற்சாகப்படுத்தும் வகையில் உணர்ச்சிகரமாக விஜய் பேசினார்.

ஒரு நாட்டுல பெரிய போர் வந்ததாம். பவர்ஃபுல்லான தலைமே இல்லாததால் பச்சை புள்ள கையில பொறுப்பு இருந்ததாம். அதனால அந்த நாட்டில் இருந்த பெரும் தலைகள் பயத்துல இருந்தாங்களாம். அந்த சின்ன பையன் நாட்டுடைய படையை நடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு போர்க்களம் போலாம் என சொன்னாராம். அப்போது அந்த பெருந்தலைகள் நீ சின்ன பையன் என்றெல்லாம் சொன்னார்களாம். எந்த பதிலும் சொல்லாமல் போருக்கு தனியாக தன் படையுடன் சென்ற அந்த பையன் அடுத்து என்ன செய்தான்? என்ன நடந்தது என தெரியாதவங்க கேட்டு தெரிஞ்சுக்கோங்க. சங்க இலக்கியத்தில் இதை சொல்லியுள்ளார்கள். ஆனால் கெட்ட பையன் சார் அந்த சின்ன பையன் என கூறியுள்ளார்.