
திருமணத்தில் மணப்பெண் கணவர் வீட்டிற்கு செல்ல மறுக்கும் சம்பவங்கள் மிகவும் அரிதாகவே காணப்படும். சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ மணப்பெண், திருமணமான நிலையில் கணவர் வீட்டிற்கு செல்ல மறுத்துள்ளார். அவரை சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் மணப்பெண் சமாதானம் ஆகவில்லை. ஒரு கட்டத்தில் குடும்பத்தினர் மணப்பெண்ணை குண்டுகட்டாக தூக்கிச் சென்று காரில் ஏற்றி அனுப்பியுள்ளனர்.
இந்த வீடியோ சமூகத்தில் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பெண்ணின் மனநிலையை கருத்தில் கொள்ளாமல், அவரை வலுக்கட்டாயமாக அனுப்பி வைப்பது மனவருத்தம் தரக்கூடியதாக இருப்பதாக நெட்டிசன்கள் கமென்ட் செய்து வருகின்றனர். மானசீக சுதந்திரத்தைப் பெற வேண்டிய பெண்கள், திருமணத்தின் பின்னர் குடும்பத்தின் விருப்பத்திற்கு இணங்க தேவையற்ற அழுத்தங்களுக்கு ஆளாகிறார்களா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
ये ह्रदय विदारक दृश्य मुझसे तो देखा भी नहीं जा रहा है 😭😭😭😭😭😭😜😉 pic.twitter.com/URjGEjpu4j
— RJ_RIYA📻 (@24karattgold1) October 21, 2024