
பிரபல நடிகரான விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இந்த கட்சியின் முதல் மாநாடு வருகிற 27-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் மாநாட்டுப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். போஸ்டர்கள் ஒட்டுவது, கட் அவுட் வைப்பது, மாநாட்டுக்கு மக்களை அழைப்பது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என அனைத்து பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
விஜய் மாநாட்டில் என்ன பேசுவார் என்பதை பார்க்க தொண்டர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் விஜயின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகரும் தாய் சோபாவும் கொரட்டூரில் இருக்கும் சாய்பாபா கோவிலுக்கு சென்று மாநாடு நல்லபடியாக நடக்க வேண்டும் என வேண்டியுள்ளனர்.