
மலையாளத் திரை உலகில் பழம்பெரும் நடிகையாக இருந்தவர் கவியூர் பொன்னம்மா. இவருக்கு வயது 79. இவர் 700 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கேரள அரசின் மாநில விருதுகளை நான்கு முறை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் கடந்த சில நாட்களாக உடல் நல குறைவு காரணமாக கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் காலமானார். இவரின் மறைவிற்கு கேரள முதல்வர் பிரனாயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இவருடைய மறைவிற்கு திரை உலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.