தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் நடிப்பில் கடந்த ஐந்தாம் தேதி கோட் திரைப்படம் ரிலீஸ் ஆனது. விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி உள்ளார். தமிழக வெற்றி கழகத்தின் கொடியும், கொடி பாடலும் சமீபத்தில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் உறுப்பினர் சேர்க்கை, மாநாடு என அடுத்தடுத்த பணிகளில் விஜய் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி அருகே இருக்கும் வி சாலையில் மாநாடு நடத்துவதற்கு சுமார் 85 ஏக்கர் பரப்பளவு உடைய நிலத்தை தேர்வு செய்தனர். அங்கு வருகிற 23-ஆம் தேதி மாநாட்டை நடத்த விஜய் திட்டமிட்டார். அதற்கு பாதுகாப்பு வழங்க கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பாக மனு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் போலீசார் அந்த மனு மீது 21 கேள்விகளை முன்வைத்து நோட்டீஸ் அனுப்பினர்.

அதற்கு தமிழக வெற்றி கழகம் சார்பாக பதில் அளித்து விட்டதாக கூறப்படுகிறது. தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் போலீசார் ஒரு சில நாட்களில் பதிலளிக்க உள்ளதாக கூறியிருக்கிறார். இன்று விஜய் மாநாடு நடைபெறும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார். அனேகமாக காலை 11.17 மணிக்கு தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நடக்கும் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.