
அமெரிக்க நாட்டை தலைமையிடமாகக் கொண்டு பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனம் இயங்கி வரும் நிலையில் நேற்று உலகம் முழுவதும் விண்டோ சேவை முடங்கியதால் ஐடி மற்றும் விமான சேவைகள் முடங்கியது. இதன் பாதிப்பு இன்றும் நீடித்த நிலையில் தற்போது அது சரி செய்யப்பட்டுள்ளது. அதாவது crowd strike-ல் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகத்தான் microsoft இணையதளம் முற்றிலுமாக முடங்கியது.
இந்த நிறுவனம் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு சைபர் பாதுகாப்பு வழங்கி வரும் நிலையில் நேற்று நடந்த சென்சார் மென்பொருள் அப்டேட்டில் குளறுபடி ஏற்பட்டதால் மைக்ரோசாப்ட் சர்வர்கள் முடங்கி உலகம் முழுவதும் அதன் தாக்கத்தை வெளிப்படுத்தியது. இந்த பாதிப்புகள் இன்று சரி செய்யப்பட்டாலும் மைக்ரோசாப்ட் மற்றும் crowd strike பங்குகள் சரிவடைய தொடங்கியுள்ளது. இதில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்குகள் 0.74% குறைந்த நிலையில், crowd strike நிறுவனத்தின் பங்குகள் 11.15 சதவீதம் வரை குறைந்துள்ளது. மேலும் இதனால் crowd strike நிறுவனம் இந்திய மதிப்பில் ரூ.75,350 கோடி இழப்பை சந்தித்துள்ளது.