சென்னை புழலில் பதுங்கியிருந்த A+ பட்டியல் ரவுடி சேது என்கிற சேதுபதி(30). இந்நிலையில் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டுள்ளார். 30க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய ரவுடி சேது என்கிற சேதுபதி புழலில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர். மேலும், உடன் இருந்த A பட்டியல் ரவுடியான பிரபு என்பவரும் அவரோடு சேர்த்து  கைது செய்யப்பட்டுள்ளார். ரவுடிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்,  ரவுடி சேதுவும் கைது செய்யப்பட்டுள்ளார்.