கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் குடித்து தற்போது வரை 57 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் பலரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அதிர்ச்சி தகவல்களை பகிர்ந்து உள்ளனர். அதாவது அதிக போதைக்காக விஷச்சாராயத்தில் பீங்கான் தொழிற்சாலைகளில் பயன்படுத்தக்கூடிய மினரல் டர்பன்டைன் ஆயில் கலந்ததாக கூறியுள்ளனர்.

புதுச்சேரியை சேர்ந்த மாதேஷ் மினரல் டர்பன்டைன் ஆயிலை வாங்கி சப்ளை செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. விருதாச்சலத்தில் உள்ள 2 பீங்கான் தொழிற்சாலைகளில் சிபிசிஐடி போலீசார் தற்போது தீவிர ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இரண்டு பேரிடம் விசாரணை நடந்து வரும் நிலையில் இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.