அண்ணாமலையின் கடின உழைப்பே பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரிப்பதற்கு காரணம் என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். டெல்லியில் இருந்து நேற்று சென்னை விமான நிலையம் வருகை தந்த ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அண்ணாமலை 24 மணி நேரமும் பாஜக வளர்ச்சிக்காக உழைத்தார். அதிமுகவில் பிரிந்திருக்கும் சக்திகள் ஒன்றிணைையவில்லை என்றால் எந்த காலத்திலும் வெற்றி பெற முடியாது. தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம் தான் என கூறியுள்ளார்.