
KKR அணி ஆனது மூன்றாவது முறையாக கோப்பை வெல்ல முக்கிய பங்கு வகித்தது அந்த அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர் தான். இந்த நிலையில் கவுதம் கம்பீர் இன்னும் மூன்று கோப்பைகள் வெல்ல வேண்டி இருப்பதாக கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், 3 கோப்பைகளை வென்றால் தான் அதிக ஐபிஎல் கோப்பைகளை வென்ற வெற்றிகரமான அணியாக மாற முடியும் .
அதற்கான பயணம் இப்பொழுதுதான் தொடங்கியுள்ளது என்று கூறியுள்ளார். இதன் மூலம் மும்பை சென்னை அணியின் சாதனையை விரைவில் முறியடிப்போம் என்று மறைமுகமாக கூறியிருக்கிறார்.