
ஹரியானா மாநிலத்தில் வசித்து வரும் பெண் ஒருவர் தன்னுடைய 11 வயது மகனை கொடூரமாக தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. தினந்தோறும் அவர் தன்னுடைய மகனை அடித்து உதைத்ததோடு அவர் மீது ஏறி அமர்ந்தும் கொடுமைப்படுத்தி உள்ளார். வேலைக்கு சென்ற அந்த பெண்ணின் கணவர் மாலை வீடு திரும்பும் பொழுது சிசிடிவி காட்சிகளை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார் . அந்த வீடியோவில் தன்னுடைய மனைவி தன்னுடைய மகனை அடித்து உதைத்து சித்திரவதை செய்ததுடன் தகாத வார்த்தைகளால் திட்டுவதும் பதிவாகியுள்ளது.
இதனை அடுத்து கணவர் தன்னுடைய மனைவியின் இந்த கொடூர தாக்குதலுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் .இந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது. இதனை அடுத்து குழந்தைகள் நலக்குழுவின் உத்தரவின் பெயரில் சூரஜ் காவல் நிலையத்தில் சிறுவனை தாக்கிய தாய் மீது கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுவனின் வாக்குமூலம் கிடைத்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Faridabad | Mother Caught On CCTV Brutally Beating Her 11-Year-Old Son
▪️The father of the child complained to police about his wife's violence. He added that his wife would threaten to consume poison every time he would try to stop her from beating the child
🔹️Child's… pic.twitter.com/LfkMRLdJto
— Voice For Men India (@voiceformenind) May 27, 2024