
தமிழ்நாட்டில் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸில் இருந்த விஜயதாரணி, பாஜகவில் இணைந்ததால் விளவங்கோடு எம்.எல்.ஏ பொறுப்பை ராஜினாமா செய்தார். அதனை சபாநாயகர் அப்பாவு ஏற்றுக் கொண்ட நிலையில் சட்டப்பேரவை செயலர் இன்று தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறார். அடுத்ததாக இடைத் தேர்தல் அறிவிக்கும் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும்