
சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் ரமணா நகர் கௌதபுரத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 14 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு லிப்ட் ஆப்பரேட்டராக கொடுங்கையூர் எருக்கஞ்சேரி இந்திரா காந்தி நகரை சேர்ந்த ஜோசப் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று காலை வழக்கம் போல வேலைக்கு வந்த ஜோசப் முதல் மாடியில் தலையில் ரத்த காயங்களுடன் மயங்கி கிடந்தார்.
அவரை குடியிருப்பு வாசிகள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஜோசப் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஜோசப் இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.