
நாட்டில் ஏரளமான நகரங்களில் UPI வாயிலாக கூகுள் பே, போன்பே ஆகிய செயலிகளை பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை நடைபெற்றுகிறது. முக்கிய நகரங்கள் துவங்கி கிராமங்கள் வரை ஆன்லைன் பணப் பரிவர்த்தனை அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கூகுள்பே இப்போது UPI ஆக்டிவேஷனுக்கு ஆதார் அடிப்படையிலான அடையாளத்தை ஏற்றுக்கொள்ளும் என கூறியிருக்கிறது.
கூகுள் பே பயனாளர்கள் தங்களது UPI PINஐ டெபிட் கார்டு இல்லாமலேயே அமைக்கலாம். UPI-க்கு ஆதாரைப் பயன்படுத்தி தேசிய கொடுப்பனவு கழகம் ஆஃப் இந்தியா (NPCI) வாயிலாக பதிவு செய்யலாம். ஒருசில வங்கிகளின் வாடிக்கையாளர்கள் மட்டும் தற்போது இந்த அம்சத்தை அணுக முடியும். இது தவிர மேலும் வங்கிகள் விரைவில் இந்த அம்சத்தை பின்பற்றும் என நிறுவனம் எதிர்பார்க்கிறது.