மகாராஷ்டிராவில் உள்ள AI இயந்திரம் உணவுகளில் உள்ள ஊட்டச்சத்து அளவுகளை கண்டறிந்து சொல்கிறதாம். ஆம்.! மகாராஷ்டிரா மாநிலம் எடப்பள்ளி என்ற கிராமத்தில் உள்ள ஆசிரமப் பள்ளியில், குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் முயற்சியில், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான இயந்திரம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

இந்த இயந்திரமானது , உணவை புகைப்படம் எடுத்து, ஊட்டச்சத்து அளவுகளை கண்டறிந்து சொல்கிறது. இதனால் குழந்தைகளின் ஆரோக்கியத்திலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி உதவி ஆட்சியர் சுபம் குப்தா விளக்கமளித்துள்ளார். இது புதிய முயற்சி நன்றாக உள்ளது  என்று இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.