தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் நயன்தாரா. இவர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நிலையில் சென்ற வருடம் ஜூன் மாதம் இருவரும் திருமணம் செய்தார்கள். இதன்பின் வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனார்கள்.

இந்த நிலையில் சர்ச்சை ஐடியாவை நடிகர் ஷாருக்கான் தான் நயன்தாராவுக்கு கூறி இருப்பார் என்ற பேச்சு கிளம்பி இருக்கின்றது. முன்னதாக ஷாருக்கான் வாடகை தாய் மூலம்தான் மூன்று குழந்தைகளுக்கு அப்பாவானார். இதனால் நயன்தாராவுக்கு ஷாருக்கான் தான் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள அறிவுரை வழங்கியிருப்பார் என்ற பேச்சு கிளம்பி இருக்கின்றது.