நடிகை ஆயிஷா தனது காதலன் யார் என்பதை தெரிவிக்க போவதாக கூறியுள்ளார்.

விஜய் டிவியில் பிக்பாஸ் 6-வது சீசன் ஒளிபரப்பாகி நிறைவுபெற்றது. இது சென்ற அக்டோபர் 9-ம் தேதி ஆரம்பமாகி விறுவிறுப்பாக  ஒளிபரப்பாகி வந்த நிலையில் சென்ற வாரம் நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலில் சாந்தி, ஜிபி முத்து, அசல், ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி, தனலட்சுமி, மணிகண்டன், விக்ரமன், அசீம், சிவின், ரக்ஷிதா, கதிரவன், அமுதவாணன் என பலர் பங்கேற்றனர்.

இதில் வெற்றியாளரை யாராலும் ஒப்புக்கொள்ள முடியவில்லை. ஆயிஷா ஜீ தமிழில் சத்யா சீரியல் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்தவர். ஆயிஷா இதன் பின் பிக்பாஸ் 6-வது சீசனில் பங்கேற்று ஐம்பது நாட்களுக்கு மேல் வீட்டில் இருந்தார். இந்த நிலையில் இவரின் காதலன் யார் என தெரிவிக்க உள்ளதாக பகிர்ந்து இருக்கின்றார். அந்த பதிவில் காதலனை அணைத்தவாரி அவருடன் எடுத்த போட்டோவை மட்டும் பகிர்ந்து இருக்கின்றேன்.