
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள கோபிகா ஜுவல்லர்ஸ் நகைக்கடையின் உரிமையாளர் நிலேஷ் கிவான்சரா, தங்களின் கடையில் நடந்த ஒரு உணர்ச்சிவசமான சம்பவத்தை சமீபத்தில் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், சில நாட்களுக்கு முன்பு ஒரு முதிய தம்பதியினர் நகைகளைப் பார்த்துவிட்டு எதையும் வாங்காமல் சென்றனர். பின்னர், சத்ரபதி சாம்பாஜிநகரிலுள்ள அதே நகைக்கடையின் மற்றொரு கிளைக்குச் சென்ற அந்தத் தம்பதியர், 93 வயது நிவ்ருட்டி ஷிண்டே தனது மனைவிக்காக தாலி வாங்க வந்ததாக தெரிவித்தார்.
அந்த நபர் கூறியதாவது, “என் மகன் குடிபோதைக்கு அடிமையாகி விட்டான். அதனால் வீட்டை விட்டு மனைவியுடன் வெளியேறி விட்டேன். இப்போது ஆடி மாத ஏகாதசியைக் காண பண்டர்பூர் கோயிலுக்குச் செல்கிறேன். என் மனைவிக்கு தாலி கட்ட வேண்டும்” என உருக்கமாக கூறியதாக கடையாளர் தெரிவித்தார். அவர் தன்னிடத்தில் தாலிக்கு தேவையான செயின் மற்றும் தொங்கட்டான் இருப்பதாகவும், தாலி மட்டும் வேண்டுமெனவும் கூறியுள்ளார். அந்த நபர் கஷ்டப்பட்டு உழைத்த 1120 ரூபாயை எடுத்துக்கண்டு தாலி வாங்க சென்றுள்ளார்.
View this post on Instagram
அவர்களிடம் பணமில்லை என நினைத்த நிலேஷ் கிவான்சரா, தங்கத் தாலியை இலவசமாக கொடுக்க விரும்பியிருக்கிறார். ஆனால் அந்த முதிய தம்பதியினர் அதை மறுத்து, “நாங்கள் பணம் கொடுக்காமல் எதையும் வாங்க மாட்டோம்” என வலியுறுத்தினர். இந்நிலையில், அந்த நபர் ரூ.10, அவரது மனைவி ரூ.10 என மொத்தம் ரூ.20 கொடுத்தனர். அவர்களது நேர்மைக்கும், உறுதியுக்கும் குவான்சரா மரியாதை செலுத்தி தாலியை வழங்கினார்.
இச்சம்பவம் பலரின் இதயங்களை தொட்டுள்ளது. தம்முடைய மனைவிக்காக தாலி வாங்கி கட்டும் பாசமான கணவனின் செயலும், அவர்களின் நிலையை உணர்ந்து பணம் வாங்கிக் கொள்ளாமலே தாலி கொடுத்த நகைக்கடையாளரின் மனிதநேயமும் நெஞ்சை நெகிழ வைக்கிறது. அவர்கள் ஜல்னா மாவட்டம் அம்போரா ஜஹாங்கீர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் பலரும் அந்தக் கடையின் உரிமையாளரை பாராட்டி வருகிறார்கள்.