தமிழகத்தில் 9 மாவட்ட கலெக்டர்கள், உயர் அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அதன் விவரம் பின் வருமாறு,

  • நெல்லை மாவட்ட கலெக்டராக இருந்த கார்த்திகேயன் மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக ஆர்.சுகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
  • திண்டுக்கல் கலெக்டராக சரவணன்.
  • கிருஷ்ணகிரி கலெக்டராக தினேஷ்குமார்.
  • விழுப்புரம் மாவட்ட கலெக்டராக ஷேக் அப்துல்லா ரஹ்மான்.
  • திருவண்ணாமலை கலெக்டராக தர்ப்பகராஜ்.
  • திருப்பத்தூர் கலெக்டராக மோகனசுந்தரம்.
  • திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி வணிகவரி துறையின் இணை ஆணையராக நியமனம்.
  • தர்மபுரி கலெக்டர் சாந்தி பட்டுப்பூச்சி வளர்ப்பு துறை இயக்குநராக மாற்றம்.
  • தொழில்நுட்ப கல்வி ஆணையராக இன்னசென்ட் திவ்யா.
  • கால்நடை பராமரிப்பு துறை இயக்குனராக கண்ணன்.
  • நகராட்சி நிர்வாக இணை ஆணையராக ஐ.ஏ.எஸ் அதிகாரி லலித் ஆதித்ய நீலம் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.