
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் நவமணி(31). இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி. இந்த நிலையில் நவமணி அதே பகுதியில் 9-ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். பின்னர் அந்த சிறுமியை திருமணம் செய்து தனியாக வீடு எடுத்து தங்கினார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் சோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் நவமணியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.