
தெலுங்கானா மாநிலத்தில் ஸ்ரீசைலம் பகுதி உள்ளது. இங்கு குடிநீர் கால்வாய் அமைப்பதற்கான சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. அதன்படி ஸ்ரீசைலம் அணையின் பின்புறத்தில் இருந்து குடிநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக துளையிடும் எந்திரங்கள் மூலம் சுரங்கபாதை அமைப்பதற்கான பணிகள் நடந்து கொண்டிருந்த நிலையில் கடந்த வாரம் ஏற்பட்ட மண் சரிவின் காரணமாக 8 பேர் சுரங்கபாதைக்குள் சிக்கிக்கொண்டனர்.
அவர்களை மீட்பதற்கான பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிக்கிய 8 பேரில் 6 பேர் தொழிலாளர்கள் என்றும், 2 பேர் பொறியாளர்கள் என்றும் தெரியவந்தது. அதில் மீட்பு குழுவினரின் தொடர் முயற்சியால் 5 பேர் உடல்கள் சேற்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் 3 பேர் இயந்திரத்தின் அடியில் சிக்கி மரணம் அடைந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.