தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் எனவும், கோவையை தலைமையிடமாக கொண்டு கொங்கு மாநிலம் பிரிக்க வேண்டும் எனவும் குரல் எழுந்து வருகிறது. இந்த நிலையில் அர்ஜுன் சம்பத் 75 தொகுதிகளுக்கு ஒரு மாநிலம் என தமிழகத்தை மூன்றாக பிரிக்க வேண்டும் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். அந்த வகையில் கொங்கு பகுதி, தென் தமிழகம் மற்றும் மீதமுள்ள பகுதி என மூன்றாக பிரிக்க வேண்டும்.

மேலும் ஐயப்பன் குறித்த சர்ச்சைக்குரிய பாடலை பாடிய இசைஞானி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது பா.ரஞ்சித். அவர்தான் மதங்களுக்கு இடையே ஜாதிகளுக்கு இடையே பிரச்சனையை ஏற்படுத்தி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.