
ஒடிசா பெர்ஹாம்பூர் பகுதியில் பாராலா மகாராஜா இன்ஜினியரிங் கல்லூரி உள்ளது. இதில் கல்லூரி விடுதியில் தங்கியுள்ள ஏழு மாணவர்கள் கடந்த வார புதன்கிழமை அன்று மாட்டிறைச்சி சமைத்து சாப்பிட்டுள்ளனர். இதை விடுதியில் தங்கியுள்ள மற்ற மாணவர்கள் கல்லூரி முதல்வரிடம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தி 7 மாணவர்களையும் விடுதியை விட்டு வெளியேற்றம் செய்துள்ளார்.
அதில் கல்லூரி விதிகளை மீறியதற்காக இரண்டு மாணவர்களுக்கு 2000 அபராதம் விதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து “பஜ்ரங் தளம்” மற்றும் “இந்து விஷ்வ பரிஷத்” குழுவினர் மாட்டு இறைச்சி சமைத்த மாணவர்களுக்கு மிகுந்த தண்டனை வழங்குமாறு வலியுறுத்துள்ளனர். மேற்கொண்டு, எந்தவித தவறான செயல்களும் நடக்காமல் இருக்க காவல்துறையினர் கல்லூரியின் வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.