
சென்னை வேளச்சேரி தரமணி 100 அடி சாலைகள் தனியார் விடுதி அமைந்துள்ளது. இங்கு 27 வயது இளம்பெண் ஒருவர் 60 வயது முதியவருடன் தங்கி இருந்தார். அந்த பெண் நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்து விட்டதாக போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அந்த முதியவர் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் வசித்த ஜோதி என்பது தெரியவந்தது. அவருக்கு வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சசிகலா(50) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
உடல் நலக்குறைவால் சசிகலா உயிரிழந்தார். சசிகலாவின் இரண்டாவது மகள் ரம்யா கணவனை பிரித்து தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இதனை அடுத்து முதியவர் ஜோதியுடன் ரம்யாவிற்கு பழக்கம் ஏற்பட்டது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முதியவரும் ரம்யாவும் விடுதிக்கு வந்து அறை எடுத்து தங்கி உள்ளனர். ரம்யாவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. அவர் ஆறு பீர் பாட்டில்களை வாங்கி வைத்துள்ளார். ரம்யா இரவே 4 பீர் வைத்துள்ளார். அதன் பிறகு இருவரும் தூங்கி விட்டனர்.
நள்ளிரவில் எழுந்த ரம்யா தனக்கு நெஞ்சுவலிப்பதாக முதியவரிடம் கூறியுள்ளார். அவர் டாக்டரிடம் செல்லலாமா என கேட்டதற்கு இளம்பெண் வேண்டாம் என கூறிவிட்டாராம். அதன் பிறகு காலையில் எழுந்து ரம்யா 2 பாட்டில் பீர் குடித்தால் உடனே நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ரம்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் உண்மை காரணம் தெரியவரும் என கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.