தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்களில் மர்ம நபர்கள் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தான் வேலை செய்து வரும் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் நல்லவர்கள் போல் நாடகமாடி சிலர் பணத்தை சுருட்டுவதும் அரங்கேறி வருகிறது. இதற்கிடையில் அண்மை காலமாக ஆன்லைன் டெலிவரிகளிலும் மோசடி அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் உத்தரபிரதேசத்தில் ஆன்லைனில் பார்சல் ஒன்றை ஆர்டர் செய்த பெண் ரூபாய்.6 கட்டணம் செலுத்த முற்படுகையில் ரூபாய்.18,800-ஐ ஏமார்ந்துள்ளார். அதாவது, டெலிவரி முகவரியை மாற்ற கட்டணமாக 6 ரூபாயை கட்டச் சொல்லி மோசடி மன்னன் ஒருவர் லிங்கை அனுப்பி உள்ளார். அதன் வாயிலாக பணம் செலுத்துகையில் பெண் பணத்தை இழந்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.