
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜபல்பூர் பகுதியில் 6 மாத பச்சிளம் குழந்தையான ஆரூஹி என்ற குழந்தையின் மர்ம மரணம் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டது. அதாவது கடந்து 2008 ஆம் ஆண்டு சுஷில் மற்றும் ரிது தம்பதிக்கு திருமணமான நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஒரு மகனும் இதைத் தொடர்ந்து கடந்த 2014 ஆம் ஆண்டு ஆரூஹி என்ற பெண் குழந்தையும் பிறந்தது. குழந்தை ஆருஹி கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி ஒரு வீட்டில் இருந்து மர்மமான முறையில் காணாமல் போன நிலையில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியதில் கடத்தல் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதைத் திறந்து போலீசார் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது ரிது தன்னுடைய மகளை மடியில் வைத்த படி செல்லும் காட்சிகள் கேமராவில் பதிவாகியிருந்தது தெரியவந்தது. பின்னர் ரிதுவும் இந்த உண்மையை ஒப்புக்கொண்டார். அதாவது தன்னுடைய குழந்தையை மன அழுத்தத்தின் காரணமாக வளர்க்க முடியாமல் ஒரு வடிகாலில் வீசிவிட்டதாக கூறினார். பின்னர் காவல் துறையினர் குழந்தையின் சடலத்தை அங்கிருந்து மீட்ட நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு ரிதுவுக்கு இந்த வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கிநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
கடந்த 2019 ஆம் ஆண்டு அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் தற்போது அவரது கணவர் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்த நிலையில் இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெற முடிவு செய்துள்ளனர். இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஜூலை 3 நடைபெற இருக்கிறது. மேலும் இந்த வழக்கில் ரிதுக்கு அவருடைய மகனை சந்திக்க நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.