
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் உள்ள 5146 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரம் செய்வதற்காக பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அரசாணையில், 2011-12 ஆம் நிதி ஆண்டில் அரசு நடுநிலைப் பள்ளிகளில் 1581 பட்டதாரி ஆசிரியர்கள், 3565 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்களை நிரந்தரமாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நிதித்துறை ஒப்புதலுடன் 10 ஆண்டுகளுக்கு மேல் தற்காலிக அடிப்படையில் உள்ள 1,581 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 3,549 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றி அமைக்க ஆணையிடப்படுகிறது. இதில் 5 ஆண்டுகளுக்கு மேல் நிரப்படாமல் உள்ள 16 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை புத்தாக்கம் செய்து நிரந்தரப் பணியிடங்களாக மாற்றம் செய்யவும் உத்தரவிடப்படுகிறது. தற்காலிக பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பு காலம் கடந்த டிசம்பர் மாதம் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.