
தமிழ்நாட்டில் தற்போது மன்னராட்சி நடைபெற்று வருவதாக முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் மாற்றுக் கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை முன்னால் அமைச்சர்கள் கே.சி வீரமணி, சேவூர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் திமுக, நாதக, அதிமுக, பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 500 பேர் அதிமுகவில் இணைந்தனர். இவர்களுக்கு முன்னால் அமைச்சர்கள் சால்வை அணிவித்து கட்சிக்கு வரவேற்றனர்.
மேலும் அவர்களுக்கு அதிமுக அடையாள அட்டை வழங்கி தேர்தல் பணியை தீவிர படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பேசிய கே.சி வீரமணி அதிமுக கட்சியில் பல்வேறு கட்சிகள் இணை உள்ளதாகவும் அதிமுக கூட்டணி வலுவாக இருப்பதாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் தற்போது கடன் வரி, சொத்து வரி, மின் கட்டணம் அனைத்தையும் திமுக அரசு ஏற்றி விட்டதாக குற்றம் சாட்டினார்.