கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் இன்று 5 பேர் உயிரிழந்தனர். கள்ளச்சாராயம் குடித்ததால் தான் அவர்கள் பலியானதாக தகவல் வெளியானது. இதை மறுத்த மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார், “கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் இறந்ததாக வெளியான தகவலின் உண்மையில்லை” என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. செந்தில்குமார், “உயிரிழந்த 4 பேரின் மரணத்திற்கு காரணமே கள்ளச்சாராயம் தான். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரிடம் சென்று நான் நேரில் பேசினேன். கள்ளச்சாராய விவகாரத்தை மாவட்ட நிர்வாகம் மூடி மறைக்க பார்க்கிறது என்று கூறியுள்ளார்.