தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் INDIA கூட்டணி வெற்றி பெறும் என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், பிரதமர் மோடியின் தேர்தல் சுற்றுப்பயணத்திற்காகவே இந்தியாவில் ஏழு கட்டங்களாக தேர்தலை நடத்துகின்றனர். சிவகங்கை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டால் நான் மீண்டும் போட்டியிட விருப்ப மனு அளிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.