கேரளாவில் வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த நான்கு வயது சிறுமி பாம்பு கடித்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் திருச்சூர் அந்தி காடு அருகே ஷமீர் மற்றும் ரேஹானா தம்பதிக்கு ஆலிய அஃப்ரின், ஆதியா சகாரின், ஆசியா ரைஹான் (4) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலை பொழுதில் குழந்தைகளுடன் வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஆசியா ரைஹானை அங்கு வந்த பாம்பு கடித்துள்ளது. உடனே சிறுமியை மருத்துவமனைக்கு பெற்றோர்கள் கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் உயிரை காப்பாற்ற முடியவில்லை. இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.