சின்னத்திரை நடிகர்கள் விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா விரைவில் காதலித்து திருமணம் செய்து கொண்டது போல் சீக்கிரமாக பிரிந்தும் விட்டனர். சமீபத்தில் லைவ் வீடியோவில் விஷ்ணுகாந்துக்கும் தனக்கும் இடையிலான பிரச்னை பற்றி விரிவாக சம்யுக்தா பேசியிருந்தார். அதாவது, விஷ்ணுகாந்த் தன்னை மிரட்டி தான் திருமணம் செய்துகொண்டார் என்று கூறியிருந்தார். அதன்பின் பலரும் விஷ்ணுகாந்தை விமர்சிக்க ஆரம்பித்தனர்.

அதனை தொடர்ந்து சம்யுக்தாவின் 4 மணி நேர வீடியோ தன்னிடம் இருப்பதாகவும், தொடர்ந்து என்னை பற்றி அவர் பேசினால் அதை வெளியிடுவேன் என்றும் விஷ்ணுகாந்த் மிரட்டியதாக கூறியுள்ளார். இதுகுறித்து சம்யுக்தா காவல் நிலையத்தில் புகாரளித்தார். எனினும் விஷ்ணுகாந்த் விசாரணைக்கு வரவில்லை, சம்மனையும் வாங்கவில்லை என பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார் சம்யுக்தா.