மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த தபால் அலுவலரான மங்காரம் என்பவர் கடந்த 1983-ஆம் ஆண்டு 3596 ரூபாய் பணத்தை கருவூல பதிவேட்டில் எழுத மறந்துவிட்டார். இதனால் அவர் மீது மோசடி வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம் கடந்த 1993-ஆம் ஆண்டு மங்காராமுக்கு 3000 ரூபாய் அபராதத்துடன் ஒரு நாள் சிறை தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தது.

இதனை எதிர்த்து மங்காராம் மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து சுமார் 32 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் மோசடி வழக்கில் இருந்து மங்காராமை விடுவித்து உத்தரவு பிறப்பித்தது.