
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் கல்பாதேவி பகுதியில் வசித்து வந்தவர் 54 வயதான நபர். இவருக்கும் போரிவலி குடியிருப்பு பகுதியை சேர்ந்த 34 வயது நபருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தன்று இருவரும் உடலுறவு வைத்துள்ளனர். அப்போது 54 வயதான நபருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு உள்ளது. இருப்பினும் அந்த நபர் மயக்கம் அடைந்த நபரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கு பதிலாக அவரிடம் இருந்த இரண்டு மொபைல் ஃபோன்களையும் திருடிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
இதனை அடுத்து பிப்ரவரி 16ஆம் தேதி அந்தப் நபரின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் காவல் துறைக்கு தகவல் அளித்தனர். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது அந்தப் நபர் இறந்து கிடந்துள்ளார். இதனை அடுத்து அவரது உடலை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அப்பகுதியில் விசாரணை நடத்தியதில் அந்தப் நபர் தனியாக தனது குடும்ப சொத்தில் இருந்து வரும் வருமானம் மூலம் வாழ்ந்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது.
இதனை அடுத்து இறந்தவரின் மொபைல் ஃபோன்களை காணவில்லை என அவரது உறவினர்கள் கூறியதை அடுத்து காவல்துறையினர் இரண்டு மொபைல் ஃபோன்களையும் தேட தொடங்கியுள்ளனர். அவை சமீபத்தில் இயக்கத்தில் இருந்துள்ளது. அதன் பின் அந்த செல்போன் கல்பாதேவி துணி சந்தை பகுதியில் இருப்பதை காவல்துறையினர் அறிந்தனர். மேலும் இறந்தவரின் வீட்டை சுற்றியுள்ள சிசிடிவி கேமராக்களை சோதனை நடத்தியதில் போரிவலி பகுதியில் வசித்து வந்த 34 வயது நபர் அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்று வந்துள்ளது தெரியவந்தது.
இதனை அடுத்து 34 வயது நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பின்னர் அவரிடம் நடத்திய சோதனையில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். ஏற்கனவே காவல்துறையினர் இறந்த நபரும், அந்த நபரும் செல்போனில் பேசிய உரையாடல்கள் போன்ற ஆதாரங்களை தொழில்நுட்ப முயற்சியால் கண்டுபிடித்துள்ளனர். இதனை அடுத்து அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.