சென்னையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், திமுக கட்சியானது ஆரம்பித்து 18 ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்தார்கள். அதேபோல அதிமுக ஆரம்பித்து 5 ஆண்டுகளிலும் ஆட்சிக்கு வந்தார்கள்.

ஆனால், நம்முடைய பாமக கட்சி தொடங்கப்பட்டு 34 ஆண்டுகள் ஆகியும் நம்மால் ஆட்சிக்கு வர முடியவில்லை, இன்னும் கூட்டணி என்று பேசிக் கொண்டிருக்கிறோம். இந்த நிலை எப்போது மாறும்?’ என்றார்.