
சுவீடனில் வேலை பார்த்து வரும் இந்திய சாப்ட்வேர் டெவலப்பர் அஷுதோஷ், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, அந்நாட்டில் இயல்பாகவே வழங்கப்படும் ஊழியர் நலன்கள் பற்றி பகிர்ந்துள்ளார். இந்த தகவல்கள் இந்திய ஊழியர்களை மிகுந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது பற்றி அஷுதோஷ் கூறியபடி, முழுநேர ஊழியர்களுக்கு வருடத்திற்கு 30 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படுகிறது. மேலும், பொது விடுமுறை தினத்துக்கு முந்தைய நாட்களில் அரை நாள் வேலை தான் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. புதிய ஊழியர்களுக்கு வரவேற்பாக புதிய iPhone மற்றும் லேப்டாப் வழங்கப்படுகின்றன. உடல் நலனையும் வாழ்க்கைத் தரத்தையும் முன்னிலைப்படுத்தும் சுவீடிஷ் நிறுவனங்கள், ஜிம்முகள், மசாஜ் மற்றும் ஒத்த நலவாழ்வு சேவைகளுக்கு ₹30,000 முதல் ₹40,000 வரை கொடுக்கிறார்கள்.
வீட்டிலிருந்தே வேலை செய்வதற்காகவும், ₹30,000 முதல் ₹50,000 வரை கிடைக்கிறது. மாதம் ஒரு முறை ₹10,000 மதிப்பில் சாப்பாட்டு செலவுக்கு பணம் வழங்கப்படுகிறது. ஊழியர்கள் கார்களை கம்பெனி சலுகையில் லீஸ் செய்து பயன்படுத்தும் வாய்ப்பும் உள்ளது. அதைவிட ஆச்சர்யம் அளிப்பதான ஒன்று – பெற்றோர் உரிமை. பெற்றோருக்கு 480 நாட்கள் சம்பளத்துடன் (80%) பெற்றோர் விடுமுறை வழங்கப்படுகிறது.
வேலை இழந்தால்கூட, யூனியன் மூலமாக 6–9 மாதங்களுக்கு வருமான ஆதரவு வழங்கப்படுகிறது. கோடை காலங்களில் வேலை நேரம் கூட தளர்வாக இருப்பது வழக்கம்.
இந்த வீடியோவில் ஓர் தகவல் இணையத்தில் வைரலானது – “விடுமுறைக்கு மனுவிட வேண்டியதில்லை. அது ஊழியரின் உரிமை” என அஷுதோஷ் கூறியபோது, பலரும் இந்திய நிலையை ஒப்பிட்டு நகைச்சுவையுடனும், வருத்தத்துடனும் கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள்.