சூரிய குடும்பத்தில் ஒரு காலத்தில் 7 கிரகங்கள் மட்டுமே அறியப்பட்ட நிலையில் விஞ்ஞானிகளின் விடாத முயற்சியால் சூரிய மண்டலத்திலேயே சனி கிரகத்திற்கு அடுத்து யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ உள்ளிட்ட கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது புளூட்டோ கிரகத்திற்கு அப்பால் கிரகங்கள் உள்ளதாகவும், அவற்றில் உயிரினங்கள் வாழ்கிறதா? என விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் புளூட்டோ கிரகத்தையும் தாண்டி சூரிய மண்டலத்தின் விளிம்பில் மர்ம கிரகம் ஒன்று இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தற்போது அந்த கிரகத்திற்கு “பிளானட் 9” என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க நியூ ஜெர்சியின் மேம்பாட்டு ஆய்வு நிறுவன விஞ்ஞானி சிஹோவா செங் கூறியதாவது, அந்த புதிய கிரகம் தோராயமாக 700 கிலோமீட்டர் அகலம் உடையது.

இது புளூட்டோவை விட 3மடங்கு சிறியதாக இருந்தாலும், ஒரு கிரகம் என கருதப்படும் அளவுக்கு பெரியதாக உள்ளது. அதனால் இது ஒரு குள்ள கிரகமாக கருதப்படும் என கூறினார். மேலும் இந்த கிரகம் தற்போது பூமியிலிருந்து 3 மடங்கு தொலைவில் உள்ளதாகவும், அதன் சுற்றுப் பாதை பூமிக்கும், சூரியனுக்கும் இடையிலான தூரத்தை விட 1600 மடங்கு அதிகம் என தெரிவித்துள்ளனர்.

இவை சூரிய மண்டலத்தை சுற்றியுள்ள பனிக்கட்டி பாறை வளையத்திற்குள் செல்வதாகவும், நமது சூரியனைத் தவிர வேறு நட்சத்திரங்களையும் கடந்த காலத்தில் கடந்து சென்றிருக்கலாம் எனவும் செங் தெரிவித்துள்ளார். இந்த புதிய கண்டுபிடிப்பை வெளிக்காட்ட ஆராய்ச்சியாளர்கள் ஜேம்ஸ் வெப், ஹப்பிள் மற்றும் அல்மா தொலைநோக்கிகளை பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் இந்த கிரகம் குறித்து 23 வயதான சாம் டின் என்ற வானியலாளர் பழைய தரவு தொகுப்புகள் மூலம் கனித்துள்ளார். அதில் சூரிய மண்டலத்தில் உள்ள மிகவும் சுவாரஸ்யமான கண்டுபிடிப்புகளில் இந்த கிரகமும் ஒன்றாகும் என தெரிவித்துள்ளார்.