
காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு சிந்து நதி நீர் உட்பட அனைத்து நதிகளையும் இந்தியா நிறுத்தியதோடு இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தான் நாட்டவர்களையும் உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் இந்தியர்கள் ஒவ்வொருவரும் வலியுறுத்திய நிலையில் நேற்று நள்ளிரவு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் இடங்களை குறிவைத்து இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் மூலம் தாக்குதல் நடத்தியது. அதன்படி லஸ்கர் இ தொய்பா அமைப்பு செயல்படும் பர்னாலா, முஷாஃபாபாரத், ஜெய்ஸ் இ முகமது அமைப்பு செயல்படும் பஹவல்பூர், ஹிஸ்புல் முகாஜிதீன் தீவிரவாத அமைப்பின் கோட்லி, சிகல் கோட் ஆகிய பகுதிகளில் இந்திய ராணுவம் குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதல் முழுக்க முழுக்க தீவிரவாதிகளை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் மட்டும்தான் தவிர பாகிஸ்தான் ராணுவத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் கிடையாது என மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக இன்று காலை 10 மணிக்கு மத்திய அரசு முழுமையான விளக்கம் கொடுக்கவுள்ளது.
#WATCH | Pinpoint precision targeting by Indian armed forces on Pakistani positions near LoC (exact location not being disclosed)#OperationSindoor pic.twitter.com/eLWGnSluEY
— ANI (@ANI) May 6, 2025
இந்நிலையில் இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத அமைப்புகள் தகர்க்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் நேற்று நள்ளிரவு ஒரு மணிக்கு பிறகு தாக்குதல் தொடங்கியது. இந்தியா ஏவுகணை தாக்குதல் மூலம் முக்கியமான பயங்கரவாத அமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் தீவிரவாதிகள் 23 பேர் உயிரிழந்த நிலையில் 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
पहलगाम हमले का बदला। भारतीय सेना ने पाकिस्तान के 9 ठिकानों पर हमला किया। रात 1.30 बजे करीब 24 मिसाइल दागी गईं। पाकिस्तानी मीडिया रिपोर्ट्स के मुताबिक– करीब 30 लोगों की मौत की सूचना है। लश्कर और जैश के ठिकानों पर बमबारी हुई है। pic.twitter.com/IvXbHpW15t
— Sachin Gupta (@SachinGuptaUP) May 7, 2025
இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத இலக்குகளும் துல்லியமாக குறி வைத்து தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் பொதுமக்களின் குடியிருப்புகள் மற்றும் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடைபெறவில்லை. மேலும் இந்த தாக்குதல் தொடர்பான வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.