
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார் கோவில் என்ற பகுதியில் ஒரு 32 வயது பெண் வசித்து வருகிறார். இவருக்கு 16 வயதில் ஒரு மகள் இருக்கும் நிலையில் இவரின் கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்டதால் ஒரு 29 வயது வாலிபரை காதலித்து அவர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
அந்த பெண்ணுக்கு இரண்டாவது கணவர் மூலமாக 3 மகள்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் தினமும் வாலிபர் மது குடித்துவிட்டு வந்து மகள்கள் மூவரையும் தாக்கி தவறாக நடந்துள்ளார். இதனால் அந்தப் பெண் தன் கணவனிடம் கோபித்துக் கொண்டு மகள்கள் நால்வரையும் அழைத்துக் கொண்டு அந்த பகுதியில் வேறொரு வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் அந்த வீட்டிற்கு சென்ற வாலிபர் தன் மனைவியின் முதல் கணவனுக்கு பிறந்த 16 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இவர் அடிக்கடி அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நிலையில் அந்தப் பெண் தன் கணவன் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த பெண்ணின் கணவரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.