வட காசாவில் உள்ள 10 லட்சம் மக்களை அடுத்த 24 மணி நேரத்திற்குள் வெளியேற இஸ்ரேல் கெடு விதித்துள்ளது. காசாவில் உள்ள அனைத்து பாலஸ்தீனியர்களும் கண்டிப்பாக வெளியேற வேண்டும் என்று பகிரங்க மிரட்டலை இஸ்ரேல் அறிவித்துள்ளது. காசாவில் உணவு, தண்ணீர் இன்றி பொதுமக்கள் அவதிப்படும் நிலையில், அங்குள்ளவர்களை வெளியேற்ற முயல்வது, தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் விரும்புகிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.