
நாமக்கல் மாவட்டம் ஆண்டிக்காடு பகுதியைச் சேர்ந்த தம்மதிக்கும் மூன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர்கள் வெளியே செல்லும்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் பாலு(24) என்பவரிடம் தங்களது பெண் குழந்தையை ஒப்படைத்து விட்டு சென்றனர். கடந்த 7-ஆம் தேதி குழந்தையை ஒப்படைத்து விட்டு அந்த தம்பதியினர் வெளியே சென்று வந்தனர்.
வீட்டிற்கு வந்த தனது பெற்றோரிடம் குழந்தை, பாலு தன்னை தலாத இடங்களில் தொட்டதாக அழுது கொண்டே கூறியது.. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த குழந்தைகள் தாய் திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் பாலுவை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.